Posts

Showing posts from September, 2012

ரெண்டாவது படம் : ட்ரெய்லர்

Image
'தமிழ்ப்படம்' படத்தின் இயக்குனர் சீ.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ரெண்டாவது படம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவா நடிப்பில் அமுதனின் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட படம் தமிழ்ப்படம். இப்படத்தின் வெற்றியினால் அமுதனின் ரெண்டாவது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விமல், அரவிந்த், ரிச்சர்ட் மற்றும் விஜயலட்சுமி  நடித்துள்ள இப்படத்தினையும்  தமிழ்ப்படத்தினை போல நகைச்சுவை படமாகவே உருவாக்கியுள்ளார் அமுதன். மேலும் இப்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் காட்சிகளைப் பார்க்கும்போது படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம். வெளியான சில மணித்தியாலங்களிலேயே சமூகவலைத்தளங்களில் ரெண்டாவது படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அந்த ட்ரெய்லர் இதோ...

எந்திரன் மற்றும் பில்லா 2 வரிசையில் அடுத்தது மாற்றான் (maatran)

Image
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்துள்ள 'மாற்றான்'திரைப்படம் ஒக்டோபர் 12ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. மாற்றான் படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக உள்ளனர். ஒக்டோபர் 12ஆம் திகதி படத்தினை திரையிட திட்டமிட்டுள்ள ஈராஸ் நிறுவனம் வரும் வாரம் முதல் படத்துக்கான புரொமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டவுள்ளனராம். மேலும் படத்தினை சுமார் 1300 திரையரங்குகளில் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்துள்ளது ஈராஸ் நிறுவனம். இந்த திரையரங்க எண்ணிக்கையானது ரஜினியின் எந்திரன் மற்றும் அஜித்தின் பில்லா 2 வுக்கு அடுத்தபடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை படத்தின் நாயகன் சூர்யா தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தனது அடுத்த படமான சிங்கம் 2 படப்பிடிப்புக்களில் கலந்துகொள்கிறார்.

ஒன்பதாவது முறையும் ஒத்திவைப்பு : அலுத்துப்போன துப்பாக்கி படக்குழுவினர்(Thuppaki)

Image
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்று பெயர் வைத்த நாள் முதல் கள்ளத்துப்பாக்கி படக்குழுவினரால் சுடப்பட்டுக்கொண்டே இருக்கிறனர் துப்பாக்கி படக்குழுவினர். கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் துப்பாக்கி என்ற தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததன் விளைவாக துப்பாக்கி என்ற தலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு ஒன்பதாவது முறையாக மீண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மற்றுமொரு முறை துப்பாக்கி படக்குழுவினரின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டது.  எனவே அலுத்துப்போன துப்பாக்கி படக்குழுவினர் புதிய தலைப்பு குறித்து பரிசீலித்து வருகின்றனர் எனத்தெரிவிக்கப்படுகிறது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட எதிர்பார்த்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தரப்பும் இதற்கு இணங்கியுள்ளதாம். எனவே சரவெடி அல்லது மும்பைத் தமிழன் என்ற இரு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபரில் திரைக்கு வருகிறது விஸ்வரூபம்..(Visvaroopam release)

Image
கமலின் விஸ்வரூபம் திரைப்படம் புதிய தொழில்நுட்பமான  3டிக்கு மாற்றப்படுவதனால் அடுத்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தகவலின்படி 2013 ஆம் ஆண்டில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வெளியான வதந்தியாம். உண்மையில் கமல், விஸ்வரூபம் படத்தினை வரும் ஒக்டோபர் மாதமே திரையிட தீர்மானித்துள்ளாராம். மேலும் படம் வெளியிடப்படவுள்ள திகதியை விரையில் உத்தியோகபூர்வமாக அறிவுக்கவுள்ளதாம் விஸ்வரூபம் படக்குழுவினர்.

Aids ஏற்படுவதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?

Image
ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள். எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள்  எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர். லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் எய்ட்ஸ், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் எய்ட்ஸ் ஏற்படலாம்.

அங்கங்களை வைத்தும் குணங்களை கூறலாம்! Check பண்ணிபாருங்க!

Image
சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வைத்து அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இது பண்டை காலந்தொட்டு இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறையாகும்.  இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் அதிகமாக காணலாம். எல்லாப் பெண்களுக்கும் இவ் லட்சணங்கள் எல்லாம் அமைவதில்லை. அப்படி அமைந்துவிட்டால் இறைவிக்கு நிகரான வாழ்கை அமையும். பொதுவாக பெண் பார்க்கச் செல்லும் பெரியோர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்ப்பத்திலும், இளையோர் அழகை பார்ப்பதிலும் கவனமாக இருப்பார்கள். சைவ சமயத்தவர்களினால் வணங்கப்பெறும் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியதாக அமைக்கப்பெறுகின்றது. அதனால் போலும் மாகாலட்சுமி மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறா என சில பெண்களை பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். பெண்களின் எவ் உறுப்பு எப்படி அமைந்தால் நன்மை பயற்கும் என்பதனை கீழே விளக்கப்பெற்றுள்ளன பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்: இதில் பிரதானமாக அமைவது மூ

Anjali யின் நடத்தையில் சந்தேகம் – தீவிரமாக கவனிக்கிறார் தாய்குலம்!

Image
அங்காடி நடிகையின் அம்மாவும் மகளை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார். கொஞ்ச நாட்களாகவே மகளின் போக்கு மர்ம போக்காக இருக்கிறது அவருக்கு. நடிகைக்கு பழக்க வழக்கம் முக்கியம். அது காதலாகி கசிந்தால், கடைசியில் கண் கசிந்து காணாமலே போக வேண்டியதுதான் என்பது தாய்குலங்களுக்கு தெரியாதா என்ன? இதனால்தான் கண்காணிப்பை பலப் படுத்தியிருக்கிறாராம். சமீபத்தில் அங்காடியின் மெயில் சாட்டிங் டீட்டெயில்சை அவருக்கு தெரியாமல் பிரிண்ட் எடுத்து பார்த்த அம்ஸ், செம டென்ஸ் ஆகிட்டாங்களாம். செத்த எலியோ, சீறுற எலியோ, கையில மருந்தோட திரியணும் மகளே என்று அவர் கொடுத்த அட்வைஸ் அங்காடியின் காதுக்குள் ஏறுச்சா என்பதுதான் புரியவில்லை.

நெருக்கமான காட்சியில் மூச்சுத் திணறல் ..!மயங்கிய நடிகை..!

Image
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை மோனல் கஜார் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து பரபரப்பேற்படுத்தினார். பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி ‘கழுகு’ கிருஷ்ணா. இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நெருக்கமாக நடித்துக் கொண்டிருந்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள். உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிவாஜி 3டி ட்ரெய்லர்

Image
சிவா‌ஐி   3 டி-யின் ட்ரெய்லர் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அழையா விருந்தாளியாக வந்து அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியவர் வேறு யாருமல்ல... ர‌ஜினி. ஏவிஎம் சரவணன் உள்பட யாருக்கும் ர‌ஜினி சிவா‌ஜ ி 3 ட ி- யின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வருவார் என்பது தெ‌ரியாதாம். அதைவிட சுவாரஸியம் சிவா‌ஜியை 3டி-யில் உருவாக்கி வருவது போன மாதம்தான் ர‌ஜினிக்கே தெ‌ரியுமாம். சுமார் ஒரு வருடமாக இந்த வேலைகள் நடந்து வருகின்றன. திடீரென ஒருநாள் ர‌ஜினியை அழைத்து படத்தின் சில பகுதிகளை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆம்பல் ஆம்பல் பாடலை மட்டும் மூன்றுமுறை ஒன்ஸ்மோர் கேட்டு பார்த்திருக்கிறார் ர‌ஜினி. விழாவில் எஸ்.பி.முத்துராமன ்,  ஏவிஎம் சரவணன ்,  தோட்டா தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் தமிழ ்,  தெலுங்க ு,  இந்தி ட்ரெய்லருடன் ஆம்பல் பாடலையும் ஒளிபரப்பினார்கள். படம் ப்ளாக் பஸ்டர் என்பதை இவை உறுதி செய்தன. அத்தனை நேர்த்‌தி, அத்தனை சுவாரஸியம். எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தை இந்தப் படம் போக்கும் என்றார் ர‌ஜினி.  3 ட ி- க்கான வேலைகள் செய்த

பாகன் – திரை விமர்சனம்

Image
குறுக்கு வழியில், சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது நண்பர்கள் சூரி, பிளாக் பாண்டி ஆகியோருடன் இணைந்து பலபேருடைய பணத்தை அபேஷ் செய்து, பல தொழில்களை தொடங்கி நட்டம் அடைகிறார். இந்த நிலையில் பெரிய பணக்காரருடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் சீக்கிரமாக பணக்காரனாகிவிடலாம் என்று யோசித்து, அதற்காக பணக்கார பெண்னான ஜனனி ஐயரை காதலிக்கும், ஸ்ரீகாந்த், காதலையே ஒரு தொழிலாக செய்ய தொடங்குகிறார். சில காட்சிகளுக்குப் பிறகு ஜனனி ஐயரும் ஸ்ரீகாந்தின் காதலை ஏற்கிறார். ஜனனி ஐயரின் ரூபத்தில் நமக்கு கோடிகள் பல கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், தனது சொத்துக்களை உதரிவிட்டு வருகிறார் ஜனனி. கோடிகளை அள்ளிட்டு வரவேண்டிய தனது காதலி, வெறும் கையோடு வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோகும் ஸ்ரீகாந்த், தனக்கு காதலை விட பணம் தான் முக்கியம் என்பதை சொல்லி ஜனனியை நடுத்தெருவில் விட்டுவிடுகிறார். தனது காதலை இப்படி கசக்கிப்போட்ட ஸ்ரீகாந்தை இனி வாழ்க்கையில் எப்பவுமே சந்திக்க கூடாது என்று எண்ணி வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார் ஜனனி. இந்த நி

வெளியானது ஐஸ்வர்யா ராய் குழந்தையின் படம்

Image
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனை விட தற்போது அதிக பாப்புலாரிட்டியில் உள்ளது அவர்கள் குழந்தை ஆராதயா தான். கடந்த 10 பத்து மாதங்களாக மீடியாவின் கண்களில் காட்டாமலே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர் அமிதாப் குடும்பத்தினர். சில மும்பைப் பத்திரிக்கைகள் ‘ஆராதயாவின் ஒரு புகைப்படம் எடுத்து வந்தால் உனக்கு பத்து மாசம் சம்பளம் போனஸ்’ என்கிற ரேஞ்சில் தங்களது நிரூபர்களை இதற்கென்றே நேர்ந்து விட்டிருக்கின்றன. குழந்தையுடன் திருப்பதி தரிசனம் செய்தபோது கூட மும்பை மீடியாக்களினால் ‘க்ளிக்’க முடியாத ஆராதயாவை சமீபத்தில் நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ஆராதயாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது ஒரு புகைப்படக்காரர் சிம்ப்பிளாக ‘க்ளிக்’கி விட்டார். கொழுக் மொழுக் என்று தாயைப் போலவே இருக்கும் ஆராதயா அம்மாவின் அதே கண் இமைகளையும் முகச் சாயலில் அம்மா அப்பா இருவரையும் கலந்து வைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு முன்பு இந்த அளவு குழந்தையாகப் பிறந்ததிலிருந்தே பரபரப்புக் குள்ளான குழந்தைகள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்டின் இரட்டைக் குழந்தைகள் தான். எதிர்காலத்தில் இன்னொரு உலக அழகிப் பட்டம் இந

சூர்யாவின் சிங்கம் 2 படப்பிடிப்பு தொடங்கியது!

Image
இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புதிய படங்களின் பூஜைகள் இன்று சென்டிமெண்டாக நடந்து வருகின்றன. சூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது.sc இதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். எஸ் லட்சுமணன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க ஏராளமான புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. நாயகன் சூர்யா, நாயகிகள் அனுஷ்கா, ஹன்ஸிகா, சூர்யாவின் தம்பி கார்த்தி, நடிகர் சிவகுமார், இயக்குநர் லிங்குசாமி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அட்டக்கத்தி இயக்குனர் படத்தை தயாரிக்கும் அஜித்

Image
அட்டக்கத்தி படத்தினை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தை அஜித்குமார் தயாரிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிபெற்றதையடுத்து அஜித்துக்கென கதை ஒன்றை உருவாக்கியுள்ளார் ரஞ்சித். கதை கேட்ட அஜித் அசந்துபோய் படத்தினை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். வயதான ஒருவரை மையமாக கொண்ட கதை அம்சம் என்பதால் படத்தில் நாயகனாக அஜித் நடிக்கவில்லையாம். மேலும் அஜித் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ராஜ் கிரண் அந்த வயதான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகுமென கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ருதிகாஷன் ஆபாச அரட்டை அடித்தாரா? அதிர்ச்சித் தகவல்

Image
நடிகை சுருதிஹாசன் சாயலில் உள்ள ஒருவர் ஆபாசதளத்தில் அரட்டை அடிப்பது போன்ற புகைப்படங்கள் சுருதிஹாசன் பெயரில் உலாவந்துகொண்டிருக்கிறது. ஒரு சில ஆங்கில தளங்கள் சுருதிஹாசனுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரியமால் குறித்த புகைப்படங்களில் இருப்பவர் சுருதிஹாசன் என வெளியிட்டுள்ளது. இருப்பினும் இப்புகைப்படங்கள் நிச்சயம் சுருதிஹாசனுடையது அல்ல என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்கு புரியும். ஆனால் ஆபாச தளங்களில் அரட்டை அடிப்பதை தொழிலாக கொண்ட இந்த பெண் சுருதிஹாசன் சாயலிலையே இருக்கிறார் என்பதும் உண்மை

சுந்தர பாண்டியன் – திரை விமர்சனம்

Image
சுப்ரமணியபுரம் எனும் உலக சினிமா மூலம் நல்ல இயக்குநராகவும், நாடோடிகள்-போராளி மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்த சசிக்குமார், வழக்கமாக சமுத்திரக்கனி படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த சசிக்குமார், முதல்முறையாக வேறு இயக்குநர் இயக்கத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’. ஒரு ஊர்ல…………………: கதை தேனி மாவட்ட கிராமங்களில் நடக்கிறது. உசிலம்பட்டிப் பெண்ணான ஹீரோயின் ‘கும்கி’ லட்சுமி மேனன் கம்பம் பகுதிக் காலேஜில் படிக்கிறார். பஸ்ஸில் போய் வரும் அவரை சசிக்குமாரின் நண்பன் – அப்புக்குட்டி இருவரும் ரூட் விட, உதவி செய்யப்போன சசிக்குமாருக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது. அதையடித்து நடக்கும் ஒரு அடிதடியில், ஒருவர் உயிரிழக்கிறார். சசிக்குமார் கொலைகாரனாக ஜெயிலுக்குப் போகிறார். உயிரிழந்தவர் சசியின் மற்றொரு நண்பனின் நண்பன். ஹீரோயின் யார் என்றால், சசியின் மற்றொரு நண்பனின் முறைப்பெண்(மச்சினி). ஆக, மூன்று நண்பர்களுக்கும் வில்லன் ஆகிறார் சசி. அப்புறம் என்ன….ஜெயில்ல இருந்து வந்தாரா, ஹீரோயினைக் கை(யையும்)ப் பிடித்தாரா?, மூன்று நண்பர்கள் என்ன செய்தார்கள், பதிலுக்கு சசிக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜனிக்கும் சன் டிவிக்கும் என்ன பிரச்சினை?

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எந்தப் புதிய படம் எடுத்தாலும் அதை முதலில் சன் டிவிக்கு விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் பல தயாரிப்பாளர்கள். பலர் படத் தயாரிப்பின்போதே சன் பிக்சர்ஸிடம் விற்ற செய்திகளும் நிறைய வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. புதுப் படம் எதுவுமே சன்டிவிக்குப் போவதற்குத் தயங்குகிறதாம். காரணம் ஜெயா டிவி இப்போது பெரும் பணத்தைக் கொடுத்து புதுப் படங்களை வாங்கத் தயாராக இருப்பதால். அத்துடன் ஆட்சி வேறு ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாலும், தயாரிப்பாளர்கள் தரப்பு ஜெயா டிவிக்கே படங்களைக் கொடுக்க முன் வருகிறார்களாம். இதனால் சன் டிவிக்கு சமீப காலமாக புதுப் படங்கள் எதுவுமே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஜெயா டிவியுடன் போட்டியிட விரும்பாததை ஒரு காரணமாகக் கூறினாலும், இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறுகிறார

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Image
கவர்ச்சியான தோற்றத்திற்கும், நடிப்பிற்கும், உடைகளுக்கும் பெயர்போனவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரேயா தான் நடிக்கும் படங்களில் தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என இயக்குனர்களிடம் வலியுறுத்தி கவர்ச்சிக் காட்சிகளை வைக்கச் சொல்வார். ஸ்ரேயா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சந்திரா படத்திலும் அதேபோல் கேட்டு வாங்கி நடித்துள்ளார். பல மாநிலங்களிலும் வெளியாகும் ஆங்கில வார, மாத இதழ்கள் தங்களது அட்டைப்படத்தில் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை போட்டு கவர் ஸ்டோரி எழுதுவது வழக்கம். வட மாநிலங்களில் வெளியாகும் ஒரு பிரபல மாத பத்திரிக்கை ஆகஸ்டு மாத இதழில் ஸ்ரேயாவின் கவர் ஸ்டோரியை வெளியிட இருப்பதால் ஸ்ரேயாவை வைத்து ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளது. இந்த ஃபோட்டோ ஷூட்டின் போது ஸ்ரேயா டாப்-லெஸ் போஸ் கொடுத்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த படங்கள் தான் இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்ரேயாவின் இந்த திடீர் மூவ்மெண்ட் பற்றி விசாரித்தபோது இந்தி திரைப்பட வாய்ப்பைப் பெற தான் ஸ்ரேயா இது போன்று ஃபோஸ் கொடுத்துள்ளார் என்கிறார்கள். அந்த மாத இதழ் இந்தி திரையுலக பிரபலங்களின் விருப்பமான பத்திரிக்கையாக இருப்பதும் உண்மை தான்.

மீண்டும் சங்கர் இயக்கத்தில் ரஜினி?

Image
கலாபதி எஸ்.அகோரம் தனது AGS Entertainment (என்டர்டைன்மென்ட்) சார்பாக ஒரு படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் சங்கரிடம் பெருந்தொகை பணத்தைக்கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். சங்கர் விக்ரமை வைத்து அடுத்தபடத்தை இயக்கவுள்ள நிலையில். அப்படம் முடிந்ததும் தனது அடுத்த பிரமாண்ட திரைப்படத்தை இயக்கவுள்ளார். அப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்கவேண்டும் என்று இயக்குனர் சங்கரும் தயாரிப்பாளரும் விரும்புகின்றனர். ரஜினி கோச்சடையானிற்கு பின்னர் ரணா வில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதைத்தொடர்ந்து ரஜினி சங்கர் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. 

மர்மமான சூர்யாவின் மாற்றான் கதை

Image
காணொளி:- அயன் மற்றும் கோ படத்தை விட அதிரடியாக இருக்க வேண்டும் என்பதற்காக கே.வி.ஆனந்தும்,சூர்யாவும் இரவு பகல் பாரமால் உழைத்துக் கொண்டிருக்கும் படம் மற்றான். இந்த படத்தின் இறுதி காட்சிகள் இப்பொழுது படமாகி கொண்டிருகின்றன. இயக்குனர் பாலா படங்களை போல இந்த படத்தின் கதையும் பெரும் ரகசியமாக வைக்கப் பட்டிருகிறது. காஜல் அகர்வால் சூர்யா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சி இந்தியா, பாகிஸ்தான் பார்டரான பு‌ஜியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை அலஸ்காவில் படமாக்க படக்குழுவினர் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த பாடல் கட்சிக்காக, அலஸ்கா பயணம் முடிந்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். இந்த படத்தின் பாடல்கள் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் கைவண்ணத்தில் உருவாகி இருக்கிறது சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தி அசத்தி இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.