Posts

Showing posts from July, 2012

கமல் மகளுக்கும் பாலிவுட் நடிகருக்கும் நட்பா ? காதலா ?

Image
  அக்ஷராவுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாமகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார்.அக்ஷராவுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ரூதீன் ஷா மகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விவான் பாலிவுட்டில் விஷால் பரத்வாஜின் 'சாத் கூன் மாஃப்" என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இவர்களின் நட்பு வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது.  ஆனால் இவர்கள் இவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றதையடுத்து இவர்களுக்கு இடையிலான தொடர்பு அம்பலமானது. கடந்த மார்ச் மாதம் அக்ஷராவுக்கு நடந்த பிறந்த நாள் விழாவில் விவான் கலந்துகொண்டார். இதே விழாவில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் பங்கேற்றார். நெருங்கிய நடிகர்கள் தவிர அக்ஷரா, விவான் நட்பு வேறு யாருக்கும் தெரியாதாம்.  இதுபற்றி விவான் கூறும் போது எனக்கு காதலி என்று யாரும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதேபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் இன்னும் தனி ஆளாகத்தான் இருக்கின்றேன் என்று கூறி அனைவரும் போல தப்பித்துக்கொ

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது

Image
   விற்பனை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கணனி உற்பத்தியாளர் என்ற பெயரை லெனோவோ நிறுவனம் இவ்வருடம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.  சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  சீனாவின் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிடல், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தல், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவனவே இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.  கடந்த வருடத்தின் 3 ஆம் காலாண்டுப்பகுதியிலேயே லெனோவோ நிறுவனம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய கணனித்தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது.  இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதிகளில் லெனோவோ நிறுவனம் கணனிச்சந்தையில் 14.9 வீதத்தினைக் கொண்டிருந்தது.  இது எச்.பி நிறுவனத்தின் 15.5 வீதத்தினை விட வெறும் 0.6 வீதமே குறைவானதாகும். தற்போதைய புள்

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

Image
புதிய மற்றும் பிரதான சற்றலைற் தொடர்களில அதிக செயற்திறன், செல்லிடமெங்கும் கொண்டு செல்லும் வசதி மற்றும் தனிப்பாணி ஆகியவற்றை டொஷிபா அறிமுகப்படுத்துகிறது.  புதிய சற்றலைற் M800 சற்றலைற் C800, தொடர்கள் சிறந்த செயற்பாங்கு, அனுபவம், மற்றும் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.  டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், இலங்கையில் உள்ள தமது மொபைல் கொம்பியூட்டிங் பங்காளர்களான ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் ஊடாக, மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதும், அனைவராலும் வாங்கக்கூடியதுமான அதிநவீன M800 சற்றலைற் L800, சற்றலைற் C800 தொடர் நோட்புக் கணணிகளை அறிமுகம் செய்தது. நாளாந்த பாவனைக்கான இந்த புதிய நோட்புக் கணணிகள் சிறந்த பாணியினையும் பல்வகைத் திறன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், பரந்தளவு கட்டமைப்பு, காட்சித்திரை அளவுகள் மற்றும் நிறங்களைக் கொண்டுள்ளது. “டொஷிபா, தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தமைவுத் தொழினுட்பம், சிறந்த செயற்திறன் மற்றும் தமது ஒவ்வொரு தலைமுறை உற்பத்தியிலும் மேம்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக பாடுபடுகின்றது. புதிய சற்றலைற் 800 தொடர் நோட்புக் க

விஜய், சூர்யாவை தவிக்கவிடும் காஜல்...

Image
காஜல் அகர்வால் தற்போது தென்னிந்தியாவில் நம்பர் ஒவன் நாயகியாகத் திகழ்கின்றார். விஜய்யுடன் 'துப்பாக்கி' சூர்யாவுடன் 'மாற்றான்', இந்தியில் ஒரு திரைப்படம், தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் இரண்டு திரைப்படங்கள் என தமிழ்நாடு, ஹைதராபாத், மும்பை என பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜய், சூர்யா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் திகதி ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'துப்பாக்கி' திரைப்படத்திற்காக விஜய்யுடன் காஜல் அகர்வால் நடிக்கும் இரண்டு பாடல்கள் இன்னமும் படமாக்கப்படவில்லை. அதேவேளை, 'மாற்றான்' திரைப்படத்திற்காக சூர்யாவுடன் ஒரு பாடல் படமாக்கப்பட வேண்டும். ஆனால் காஜல் அகர்வால் இதற்காக ஒதுக்கிக்கொடுத்த திகதிகளை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதால் தற்போது மீண்டும் திகதிகள் கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் மேற்படி திரைப்படக் குழுவினர் கேட்டுள்ள திகதிகளை வேறு திரைப்படங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் காஜல். இதனால் மேற்படி இரண்டு த

புதிய போட்டோஷொப்பில் வீடியோ எடிட்டிங்

Image
புகைப்படங்களை எடிற் செய்ய பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருளான போட்டோஷொப் மென்பொருளின் புதிய வெளியீடான போட்டோஷொப் சிஎஸ் 6 இனை அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கான பீட்டா வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இந்த வெளியீட்டில் வீடியோக்களின் வர்ணங்களையும், அவற்றின் கறுப்பு வெள்ளை விகிதத்தையும் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பதிப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அடோப் நிறுவனத்தில் போட்டோஷொப் உற்பத்தி முகாமையாளர்களில் ஒருவரான ஷொனைத கீ, கடந்த சில வருடங்களாக புகைப்படங்களும், வீடியோக்களும் இணைந்தவாறான நிலை ஏற்பட்டு வருவதாகவும், புதிய புகைப்படக் கமெராக்கள் வீடியொ வசதியை வழங்குவதன் காரணமாக வீடியோக்களை எடிற் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் புகைப்படங்களுக்கு மாத்திரம் எனக் காணப்பட்ட கருவிகள் தற்போது வீடியோக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதன் காரணமாக வீடியோக்களுக்கான வசதியை உள்ளடக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். புதிய பதிப்பில் வீடியோக்களை எடிற் செய்யும் வசதி பின்வரும் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பை விட புகை

தொப்பையை தொலைத்த அஜித்...

Image
அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் நடிகர் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையோ, மேலதிக சதையோ இல்லாமல் மாறியுள்ளார். அஜீத்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார். ஆனால் இன்னொரு பக்கம், எந்த விமர்சனத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ, ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார். அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் திரைப்படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும் எடுத்து வருகின்றார்.  இந்த திரைப்படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் வெளியிட்டுள்ளார்.  அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சகர்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்சு

Office 2013ற்கான டெமோவை வெளியிட்டது மைக்ரோசொப்​ட் ..

Image
முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது MS Office மென்பொருள் பொதியின் 2013 பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்துப்படவுள்ளது. இதன் அடிப்படையில் MS Office இன் முன்னைய பதிப்புக்களிலிருந்து தற்போது வெளிவரவுள்ள Office 2013 பதிப்பில் காணப்படும் புதிய அம்சங்கள் தொடர்பாக பயனர்களுக்கு விளக்கும் முகமாக தனது டெமோவினை வெளியிட்டுள்ளது. இவை இந்த வருட இறுதியில் முழுமையாக வெளிவரவுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியவாறு மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பதிப்பான Office 2013இல் ஒன்லைனிலிருந்து படங்களை உட்புகுத்திப் பயன்படுத்த முடிவதுடன் பயனர் இடைமுகத்தை மாற்ற முடிதல் போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் களமிறங்கக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். முகப்பு

அஜீத் படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக அதுல்குல்கர்னி?

Image
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கப்போவதில்லை என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அரவிந்த்சாமி கேட்ட சம்பளம்தானாம். அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் விஷ்ணுவர்த்தன். இந்த படத்தில் அஜீத்தும் அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகின. அரவிந்த் சாமியிடம் கதை சொன்ன உடன் திருப்தியடைந்த அவர் உடனே ஒகே சொல்லி விட்டாராம். ஆனால் அவர் கேட்ட சம்பளம்தான் இயக்குநரை மயக்கமடைய வைத்திருக்கிறது. ரெண்டுகோடி கேட்டதுதான் தாமதம் தலை தெறிக்க ஓடிய விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். இப்போது அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி நடித்துக்கொண்டிருக்கிறார். சம்பளம் இருபது லட்ச ரூபாய்தானாம்.

மாற்றான்… சுட்ட படமா, சுடாத படமா…?

Image
ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல ‘ஹாலி’ இருக்கு, இதுல ‘கோலி’ இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி ‘ஜாலி’யான சொந்தமும் இருக்கிறது – அதுதான் ‘இன்ஸ்பிரேஷன்’. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது ‘ரொட்டி’ போல சுட்டுக் காட்டுவார்கள். அதை ‘அப்பாவிகள்’ சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை ‘இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படி ஒரு ‘இன்ஸ்பைர்’ கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார். அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வே

நான் ஈ படத்தின் அதிரடி திரை விமர்சனம்

Image
சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல  Eega  என்ற பெயரில்   ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..  படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை.. இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு

பில்லாவை விட மாற்றான் இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

Image
பில்லா 2  44 கோடிக்கு உரிமைகள் விற்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மாற்றான் அதையும் மிஞ்சி விட்டது. மாற்றானின் தமிழ்நாடு  , கேரளா , கன்னடாவின் உரிமை  மாத்திரம் 43 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கு உரிமை 17 கோடிக்கு விற்கப்பட்டது யாவரும் அறிந்ததே. வெளிநாடுகளுக்கு 12 கோடி என அனைத்து இடத்திலும் மிரட்டுகிறது மாற்றான். ல் இருந்து களவாடப்பட்டது. இந்நிலையில் தொலைக்காட்சி மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் விற்றால் சராசரியாக 15 கோடி வரும். எல்லாவற்றையும் கூட்டினால் நிச்சயம் 80 கோடி தாண்டும். பில்லாவை பார்த்து பலரும் வாயை பிளக்கும் நேரம் மாற்றான் அதிரடியாக சாதித்துள்ளது. இப்போது மாற்றானை பார்த்து என்ன செய்ய போகிறீர்கள்??????? காஜலுடன் சூர்யாவை  இணைத்து வந்த செய்தியின் பிறகே மாற்றானின் இந்த நிலை…

பில்லா 2 திரை விமர்சனம்

Image
படம் : பில்லா 2 நடிப்பு : அஜித் , பார்வதி ஓமனக்குட்டன் , ப்ருணா அப்துல்லா , ரஹ்மான் , மற்றும் பலர் இசை : யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் : சக்ரி டலோடி தயாரிப்பு : சுரேஷ் பாலாஜி , சுனிர் கேடேர்பால் பில்லா 2 , மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம் படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம்” அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்…உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா…என்று சொல்ல

புகைப்படங்களை இணைத்து அழகான வீடியோவாக உருவாக்க

Image
பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் உங்களது குடும்ப நிகழ்வுகள், சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வீர்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தையும் இணைந்து, ஒரு வீடியோவாக உருவாக்கலாம். இதற்கு முதலில்  http://www.timelinemoviemaker.com/  என்ற தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும். இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும். பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும். உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும். முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம். இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.

புதுவீட்டில் பிரபுதேவா !

Image
  பிரபுதேவா கூடியவிரைவில் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் குடியேறவுள்ளார்.   பிரபுதேவா போக்கிரி படத்தை இந்தியில் சல்மான்கானை வைத்து வாண்டட் என்ற பெயரில ரீமேக் செய்திருந்தார். அந்தப் படம் பல கோடி ரசிகர்களைக் கவரும் வகையில் சாதனை படைத்துத் தந்தது.  இதனைத்தொடர்ந்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தியில் அக்~ய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அப்படமும் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்தது. இதனால் பிரவுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு. பிரபுதேவா தொடங்கும் படம் தோல்வியில் முடிவதில்லை என்று நினைக்கும் அளவிற்கு புகழைத்தேடிக்கொண்டு விட்டார். இதனால் மும்பையிலே தங்க முடிவு செய்துள்ளார். அவர் வீடுதேடி அலைந்த போது ஸ்ரீதேவியும், அவரது கணவரும் அவர்களது கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் தங்கும்படி கூறியுள்ளனர். இதனை ஒப்புக்கொண்டுவிட்டார் பிரபு தேவா.  இதன் காரணம் தான் புரியவில்லை. ஸ்ரீதேவியும் தன்னுடைய மகளை திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக போராடிவருகின்றார். பழம் நழுவிப் பாலில் விழுந்து விட்டது 

கோச்சடையான் ஒளிபரப்பு உரிமை: சாதனை விலையில் ஜெயா தொலைக்காட்சி வசம்

Image
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள முப்பரிமாண படமான கோச்சடையான் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி மிகப்பெரிய தொகை கொடுத்து தன்வசப்படுத்தியுள்ளது இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ஈரோஸ் மற்றும் வன் குளோபன் உறுதிப்படுத்தியுள்ளது.   ரஜினி, தீபிகா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெரோப் என நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கவுள்ள கோச்சடையான் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்க அனைத்து தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டன இறுதியில் இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரும் விலை கொடுத்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் கோச்சடையானின் ஒளிபரப்பு உரிமையை தனதாக்கிக்கொண்டுள்ளது.  மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு தற்போது சீ, சொனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் கவர்ச்சியான பெண் நடிகையாக கத்ரினா கைப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Image
ஏக் தா டைகர், தூம்-3 மற்றும் ஷாருகானுடன் பெயரிடப்படாத படங்களில் நடித்து வரும் கத்ரினாவை தெரிவு செய்தவர்கள் பெண்கள் அல்ல, ஆண்களுக்கான முன்னணி இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பிலிருந்து இவருக்கான வாக்கு அதிகமாக கிடைக்கப்பெற்றதையடுத்து இவர் தெரிவாகியுள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் போட்டியிட்டவர்கள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும் ஹொலிவுட் நடிகைகளான மெகன் பாக்ஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இவர்.  இதுகுறித்து இவர் கூறியுள்ளதாவது உலகின் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக தான் மீண்டும் தெரிவாகி இருப்பது குறித்து உண்மையிலேயே பெரிய மகிழ்ச்சி. இதற்காக என்னைத் தெரிவுசெய்த அனைவருக்கும் நன்றி. எனது உடல் அமைப்பைப் பார்த்து மட்டும் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. கவர்ச்சியாக இருப்பது உடைகளைப் பொறுத்துமட்டுமல்ல. வெறும் ஒரு கொட்டன் சேலையை உடுத்தினாலும் மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகை டாப்ஸிக்காக அடிதடி

Image
சென்னையில் கடந்த 7ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்த தினத்திற்காக இரவு விருந்துக்கு சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்திருந்தார். அவ்வேளையில் நடிகர் மகத்தும், மஞ்ச் மனோஜூம் அடிதடியில் இறங்கியுள்ளனர். இதன் காரணம் நடிகை டாப்ஸி யாருக்குச் சொந்தமானவள் என்பதாம்.   அந்தச் சண்டை பொலிஸ் வரைக்கும் சென்று நீதிமன்றத்திற்கும் போகும் நிலையில் உள்ளது. சண்டையில் மகத்தின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்துக்கு சிகிச்சையளிக்க ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரிடம் வினவியபோது நள்ளிரவு 2 மணிக்கு விருந்து முடியும் தறுவாயில், அதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் மனோஜ் என்னை தனியாக அழைத்தார். அவருடன் அவரது நண்பர்கள் 3 பேரும் இருந்தனர். அப்போது நான் எதிர்பாராத நிலையில் அவர்கள் என்னை மிகவும் மோசமாகத் தாக்கினார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர

விஜய் ஜோடி சுருதிஹாசன் இல்லை

Image
கவுதம் மேனன் இயக்கவுள்ள படம் 'யோவான் அத்தியாயம் ஒன்று" விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கொலிவுட்டில் கூறப்படுகின்றது.   இது குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டபோது, ஸ்ருதி ஹாசனிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லையென்றும் உண்மையாக விஜய்க்கு ஜோடியாக யார் என்பது இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறப்படுகின்றது.  இப்படத்திற்கு இன்னும் பல நடிகர்களைத் தேர்வு செய்யவேண்டியுள்ளதுடன் விஜயிடம் மெலிய வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். யோவான் தமிழுக்கு முற்றிலும் ஆக்~ன் த்ரில்லர் படமாக இருக்கும். இப்படப்பிடிப்பு பெர்லினில் நடக்கவிருப்பதாகவும், இதுதவிர பல்வேறு நாடுகளில் படமாக்க உள்ளதென்றும், ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடிக்கவுள்ளார்கள் என்றும் மேனன் தெரிவித்துள்ளார்.  இது பற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது அது உண்மை இல்லை, யோவான் படத்தில் நடிப்பதுபற்றி இதுவரை எவரும் என்னிடம் பேசவில்லை. இப்போதுள்ள நிலையில் நான் கைநிறையப் படங்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

விக்ரமின் 'ஐ" திரைப்படம்

Image
  படத்திற்கு படம் தன்னை இயக்குனர்கள் வித்தியாசமாகக் காட்ட நினைக்கிறார்களோ இல்லையோ, தன் திரைக்கு வித்தியாசமாக மெனக்கெடுபவர் விக்ரம்.  தெய்வத்திருமகன் படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்த விக்ரம் தாண்டவத்தில் ஆக்~ன் அவதாரத்தில் தோன்றி அதன் பின் ~ங்கர் இயக்கும் 'ஐ" படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தில் விக்ரமுக்கு பல்வேறு வேடங்கள் உள்ளதால் முதல் பாதி படத்தில் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிற்பாதியில் உடம்பு மிகவும் மொத்தமாக இருக்க வேண்டுமாம்.  இதற்காக ஒல்லியாக இருக்க வேண்டிய காட்சிகளை எடுத்து விட்டு மூன்று மாத காலத்திற்கு பின் கொழுக்கவுள்ளாராம். சீனாவில் 'ஐ" படத்திற்காக 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். சமந்தா விலகியதை அடுத்து ஏமி ஜாக்சன் நடிக்கலாம் என்ற செய்திகள் உலா வருகின்ற