நடிகை டாப்ஸிக்காக அடிதடி


சென்னையில் கடந்த 7ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்த தினத்திற்காக இரவு விருந்துக்கு சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்திருந்தார். அவ்வேளையில் நடிகர் மகத்தும், மஞ்ச் மனோஜூம் அடிதடியில் இறங்கியுள்ளனர். இதன் காரணம் நடிகை டாப்ஸி யாருக்குச் சொந்தமானவள் என்பதாம். 

அந்தச் சண்டை பொலிஸ் வரைக்கும் சென்று நீதிமன்றத்திற்கும் போகும் நிலையில் உள்ளது. சண்டையில் மகத்தின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்துக்கு சிகிச்சையளிக்க ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரிடம் வினவியபோது நள்ளிரவு 2 மணிக்கு விருந்து முடியும் தறுவாயில், அதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் மனோஜ் என்னை தனியாக அழைத்தார். அவருடன் அவரது நண்பர்கள் 3 பேரும் இருந்தனர். அப்போது நான் எதிர்பாராத நிலையில் அவர்கள் என்னை மிகவும் மோசமாகத் தாக்கினார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர் மகத். 

இந்த மோதலானது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை டாப்சியை யார் காதலிப்பது என்பதில்தான் இவர்களுக்குள் இந்த மோதல். இது குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது அவர் ஒன்றும் கூறாது சென்று விட்டார்.

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App